நீ யாருக்கோ
செய்த மெளன
அஞ்சலியைப் பார்த்ததும்…
எனக்கும் செத்துவிடத்
தோன்றியது ….
***************************************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
***************************************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
***************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
***************************************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…
Categories:
படித்ததில் பிடித்தது--Tabu Sankar’s kavithai
0 comments:
Post a Comment